tamilnadu

கௌசிகா நதிக்கரையோரம் குப்பைகளை கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு

அவிநாசி, செப். 22- அவிநாசி அருகே கௌசிகா நதிக்கரை யோரம் குப்பைகளை கொட்டிய வாகனம் சிறைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், தெக்கலூர் வழி யாக நொய்யல் ஆற்றின் துணை நதியான கெளசிகா நதி கடந்து செல்கிறது. மழைக் காலங்களில் அதிக அளவிலான மழை நீர் கெளசிகா நதியில் சென்று நொய்யல் ஆற் றில் கலந்து வருவதால், இந்த நதியில் தற் போது தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, சீர மைப்பணி நடைபெற்று வருகிறது. அதே நேரம், அப்பகுதியைச் சுற்றியுள்ள தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப் படும் கழிவுகள், குப்பைகளை கௌசிகா நதிக்கரையோரம் கொட்டிச் செல்கின்ற னர். இதனால் நீர் வரத்து தடைபடுவது மட்டு மின்றி, தூர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற் பட்டு வருகிறது.

 இந்நிலையில் திங்களன்று மாலை, அவி நாசி - கோவை சாலையில் கௌசிகா நதி யோரம் குப்பைகளை கொட்டிய வாக னத்தை, ஊராட்சி நிர்வாகத்தினர் சிறைப் பிடித்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத் தினர் கூறியதாவது, குப்பைகளைக் கொட் டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.25 ஆயி ரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொட்டிய குப்பைகளை அள்ளிச் செல்ல வேண்டும் என எச்சரித்துள்ளோம். மீண் டும் இதுபோல் தெக்கலூர் ஊராட்சி பகுதி களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித் துள்ளதாக தெரிவித்தனர்.