தாராபுரம், செப்.19 - தாராபுரம் அருகே நிறுத்ததில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம், பழனி சாலையில் மங்க ளாம்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள மங்களாம்பாளையம் பிரிவு பேருந்து நிறுத்தத்திலிருந்து பழனி மற்றும் தாராபுரத்திற்கு தொழிலாளர் கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் பேருந்தில் சென்று வருகின்ற னர். இந்நிலையில் வியாழனன்று காலை பேருந்து நிறுத்தத்தில் மில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் காத்திருந்தனர். அப்போது பழனி செல்லும் தனியார் பேருந்து தொழிலா ளர்கள் பேருந்தை நிறுத்துமாறு சைகை காட்டியும் நிற்காமல் சென்றுவிட்டது. இதுகுறித்து அறிந்த மங்களாம் பாளையம் கிராம மக்கள், பழனி சென்று மீண்டும் மங்களாம்பாளையம் வந்த தனியார் பேருந்தை சிறைபிடித் தனர். இதுகுறித்து தகவலறிந்த தாராபுரம் ஆய்வாளர் கோபிநாத் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது, தனியார் பேருந்து நிர்வாகமும் இனி மங்களாம்பாளை யம் பிரிவில் பேருந்தை நிறுத்தி பய ணிகளை ஏற்றி செல்வதாக உறுதி யளித்தனர். இதையடுத்து பொதுமக் கள் கலைந்து சென்றனர்.