tamilnadu

img

மாவட்ட ஆட்சியர் தலைமையில் வங்கியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

 திருப்பூர், செப். 18- திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் ஆண்டுக்கடன் திட்டம் புதனன்று வெளி யிடப்பட்டது.  திருப்பூர் மாவட்ட வங்கியாளர் ஒருங்கிணைப் புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனி சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் 2019-20ஆம் ஆண்டிற்கான கடன் திட்டம் தொடர்பாக விரிவான விளக்கங்கள் அடங்கிய புத்தகம் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை கனரா வங்கியின் திருப்பூர் மண்டல துணை பொது மேலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி பெற்றுக்கொண்டார்.  இந்நிதியாண்டில் முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.12036.10 கோடி. இதில் வேளாண்மை துறைக்கு ரூ.3179.35 கோடியும், சிறு வணிகத்துறைக்கு ரூ.7223.72 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கான வீட்டுக்கடன், மரபு சாரா எரிசக்திக்கடன், கல்வி கடன் மற்றும் இதர  கடன்களுக்காக ரூ.1633.03 கோடியும் இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டுக் கடன் திட்டத்தை விட ரூ.847.05 கோடி கூடுதலா கும். இக்கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ந.சத்தியமூர்த்தி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், தாட்கோ மாவட்ட மேலா ளர், கைத்தறித்துறை உதவி இயக்குநர் மற்றும் வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.