tamilnadu

img

வீட்டுத் தோட்டம் அமைக்க அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு

அவிநாசி, செப். 20- அவிநாசி வட்டார அள வில் வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் அங்கன்வாடி பணி யாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்ற ர். இது குறித்து குழந்தை வளர்ச்சி திட்டத்தினர் கூறி கையில், போஷான்  மா என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பெண் கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், தேசிய சுகாதார பணி, தூய்மை இந்தியா, கல்வித்துறை, தோட்டக்கலைத் துறை, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட திட்டங்கள் ஒருங்கிணைந்து செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மட்டு மல்லாது அனைத்து தரப்பு மக்களும் ஆரோக்கியமாக வாழ ஊட்டச்சத்து குறித்து இணையம் வழியாக விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக அங்கன்வாடி மையத்தில் காய்கறி தோட் டங்கள் அமைத்தல், எடை குறைவான குழந் தைகளை கண்டறிந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்கள் முறைப்படி வழங்குதல் போன்ற பணிகள் அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்ற னர்.  தற்போது ஒவ்வொரு அங்கன்வாடி மையம், தனி நபர் வீடுகள் உள்ளிட்ட வற்றில் வீட்டுத் தோட்டமும், தொகுதி அள வில் சமுதாய வீட்டுத் தோட்டங்கள் அமைக் கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரு கிறது. இதில், பொதுமக்கள் போதுமான தக வல்களை கேட்டறிந்து, வீட்டுத் தோட்டம் அமைக்க உரிய ஒத்துழைப்பு வழங்கி பயன் பெற வேண்டும் என கூறினர்.