tamilnadu

அவிநாசி: வங்கி ஊழியருக்குக் கொரோனா

அவிநாசி, ஆக. 6 - அவிநாசியில் வங்கி ஊழியருக்குக் கொரோனா தொற்று வியாழனன்று உறுதி செய்யப்பட்டதை யடுத்து வங்கி மூடப்பட் டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சேவூர்-கோபி சாலையில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இதில், துணை மேலாளராக பணியாற்றும் சேவூர் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயது ஆணுக்குக் கடந்த வாரம் காய்ச்சல் ஏற் பட்டதையடுத்து, கோவை தனியார் மருத்துமனையில் கொரோன பரிசோதனை செய்துள்ளார்.

இதில் வியா ழனன்று வெளியான முடி வில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டது. இதைத்தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார். மேலும் அவர் பணி யாற்றிய வங்கி மூடப்பட்டு, வங்கியில் உடன் பணியாற் றும் 6 பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சேவூர் பகுதி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

;