tamilnadu

அரசு தலைமை மருத்துவமனையில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் திடீர் ஆய்வு

திருப்பூர், பிப். 8 - திருப்பூர், தாராபுரம் சாலை பெரிச் சிப்பாளையம் பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள் ளது. இதில், சனியன்று பொது சுகாதாரத்ரத்துறை இயக்குநர் குழந்தை சாமி ஆய்வு மேற்கொண்டார். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலில் ஆயி ரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள னர். மேலும், நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். அதையடுத்து, இந்தி யாவில், கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சீனாவில் இருந்து வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருகின்றனர். அதேபோல், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தயார்படுத்தப் பட்டுள்ளன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலும் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தனி வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநில பொது சுகாதாரத்துறை இயக் குனர் குழந்தைசாமி சனியன்று இந்த மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.  அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஏற்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மருந்துவர்கள் எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்க தயாராக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வருவதற்காக, சிறப்பு, ‘108’ ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ மனையில் பணியாற்றக்கூடிய மருத்து வர்கள், ஊழியர்கள், துப்புரவு பணி யாளர்களுக்கு சிறப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தலைவர் டாக்டர் நிர்மலா உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.