tamilnadu

img

சாக்கடை வசதி கேட்டு செயல் அலுவலரிடம் மனு

அவிநாசி, ஜூன் 1- இராக்கியபாளையம் பகுதியில்  சாக்கடை வசதி கேட்டு செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அவிநாசியை அடுத்த திருமுருகன்பூண்டி பேரூராட் சியில் பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 13, 14 ஆகிய வார்டு பகுதியில் சாக்கடை வசதி இல்லாமல் மக் கள் நீண்ட வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இராக்கியபாளையத்திலிருந்து உம்மசெட்டிபாளையம் வரை புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற தொடங்கியுள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்க டாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, பால சுப்பிரமணி  ஆகியோர் தலைமையில் அப்பகுதி பொது மக்கள், தார்ச்சாலை பணியுடன் சாக்கடை வசதியும் செய்தி தரவேண்டுமென பூண்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவைப் பெற்றுக் கொண்ட பேரூராட்சி அதிகாரி விரைவில் சாக்கடை வசதி ஏற்படுத்தி தருவதாக கூறினார்.