tamilnadu

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.50 சத போனஸ் வழங்க உடன்பாடு

அவிநாசி, நவ.5- அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு நடப்பாண்டு 13.50 சதவிகிதம் போனஸ் வழங்குவது என இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றிய பகுதியில்  இயங்கும் விசைத்தறிகளில் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக விசைத்தறி கூலித்துணி உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளும், விசைத் தறி தொழிற்சங்க நிர்வாகிகள் இடையிலான பேச்சு வார்த்தை  வியாழனன்று நடைபெற்றது. இதில் உற்பத்தியா ளர் சங்கம் தரப்பில் முத்துச்சாமி, செந்தில், நடராஜ், தொழிற் சங்கங்கள் சார்பில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க  மாநிலத் தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய நிர்வாகி பழனிச் சாமி, ஏஐடியுசி செல்வராஜ், ஏடிபி வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.