tamilnadu

காவல் துறை அராஜகத்திற்கு எதிராக விவசாயிகள் இன்று கண்டனக் கூட்டம்

திருப்பூர், ஆக. 24 - திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் காவல் துறையினரின் அத்துமீறிய அராஜகச் செயலை கண்டித்து ஞாயிறு காலை 10 மணிக்கு கண்டனக் கூட்டம் நடத்துவதாக உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம்,  வாவிபாளையம் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக பவர்கிரிட் நிறுவ னத்தின் உயர் மின் கோபுரம் அமைக்கும்  திட்டப் பணிக்காக நிலஅளவைப் பணி  செய்கின்றனர். விவசாயிகளின் அனுமதி யில்லாமல் சட்டவிரோதமாக 200க்கும் மேற்பட்ட காவல்துறையினருடன் வரு வாய்த்துறை, பவர்கட் நிறுவனம் ஆகியோர் சேர்ந்து இதில் ஈடுபடுகின்றனர். சட்டத்தை மீறி அளவீடு செய்தபோது பாதிக்கப்பட்ட விவசாயிகளை மிகவும் கடுமையான வார்த்தைகளால் திட்டியும், எரிச்சல்படுத்தியும், தரக் குறைவான நடவ டிக்கைகளில்  ஈடுபட்டும் காவல் துறை யினர் அவமரியாதை செய்தனர். விவசாய  இயக்க முன்னோர்களால் 63 இன்னு யிர்களை ஈந்து பெற்ற இலவச மின்சாரத்தை  ரத்து செய்து விடுவேன் என்று திருப்பூர்  மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குணசேகரன் மிகக் கடுமையாக மிரட்டி னார். அவருடன் அன்று பாதுகாப்பு பணிக்கு  வந்த காவல்துறையினர்  நாகரிகமற்ற செயல்களை செய்தனர்.  காவல் துறையினரைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பல்லடம் - உடுமலை சாலையில் வாவி பாளையம் பிரிவு அருகே உள்ள பாதிக் கப்பட்ட உழவரான வரதராஜன் தோட் டத்தில் கண்டனக் கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து அரசியல் கட்சி தலை வர்கள், உழவர் சங்க தலைவர்கள் பங்கேற் கின்றனர். பாதிக்கப்பட்ட உழவர்களுடன் மற்ற உழவர்கள், பொதுமக்கள் பெருந் திரளாகக் கலந்துகொண்டு உழவர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் வசை பாடிய காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து எதிர்ப்பைப் பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு உயர்மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.