tamilnadu

தொழிற் பழகுநர் சேர்க்கைமுகாம்

திருப்பூர், பிப். 18- தேசிய தொழிற் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத் தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கோயம்புத்தூர் மண்டல அளவில் தொழிற் பழகுநர்களுக்கானஅப்ரண்டீஸ் சேர்க்கைமுகாம் கோவை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் பிப்.24 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.  இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங் கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட் டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங் களை நிரப்ப உள்ளனர். இதில் பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (என்ஏசி) வழங்கப்படும். தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப் படும். மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கிறது.  தற்போது தொழிற்பழகுநருக்கான உயர்த்தப் பட்ட உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப ரூ.7500 முதல் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, எஸ்சிவிடி  திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி பெற்றவர் கள், 8, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2  வகுப்புகள் முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விபரங்களை அறியும் பொருட்டு அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர், நேரிலும் மற்றும் தொலைபேசி (0421- 2250500) வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.