tamilnadu

அடுக்குமாடிக் குடியிருப்பில் முறைகேடா?

அவிநாசி, ஆக். 6 - திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்தில் திமுக கூட்டணிகட்சிகளின் கூட்டம் அவிநாசி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. இதில் அவிநாசி பேரூ ராட்சி, திருமுருகன்பூண்டி பேரூராட்சி, தெக்கலூர், பொங்கலூர், உள்ளிட்ட பகுதிகளில் தமிழகக் குடிசை மாற்று வாரியத்தின் மூல மாக நடைபெற்று வரும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடப் பணியில், இடைத் தரகர்கள் மூலமாக அதிகக் கட்டணம் வசூலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து துறைசார்ந்த அதிகாரிகளை சந்திப்பது என முடிவு செய்யப்பட் டது. மேலும் இதேநிலை தொடருமானால் கூட்ட ணிக் கட்சிகளுடன் வலு வான போராட்டத்தை முன் னெடுப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.  இதில் திமுக பழனிச் சாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முத்துச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இஷாக், இந்திய தேசிய காங்கிரஸ் கோபாலகிருஷ் ணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தம்பு (எ) கோவிந்தராஜ், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி லோகநாதன் உட்பட கூட் டணிக் கட்சியின் முக்கிய நிர் வாகிகள் கலந்து கொண்ட னர்.

;