tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை வரைவை கைவிடுக திருப்பூரில் கோபாவேச ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 21- இந்தியாவில் கல்வியை வணிக மயம், வகுப்புவாத மயமாக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவை கைவிட வலியுறுத்தி திருப்பூரில் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகள் கலந்து  கொண்ட கோபாவேச ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் தியாகி குமரன் நினை வகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச மாவட்டச் செயலாளர் ஆர். குமார் தலைமை ஏற்றார்.  இதில் மாநில கூட்டாட்சிக்கு எதிராக, கார்ப்பரேட் நிறுவனங் களின் லாப வேட்டைக் காடாக இந்திய கல்வித்துறையை மாற்று வதற்கு எதிராக, வகுப்புவாத, இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, ஏழை, எளிய மக்களின் கல்வி  உரிமையைப் பறிப்பதற்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்தும் கோரிக்கை பதாகை களை ஏந்தி முழக்கங்கள் எழுப் பினர். இதில் தமுஎகச மாநில செயற் குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், அறிவியல் இயக்கத் தலைவர் செல்லதுரை, கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு  மூர்த்தி, திக ஆறு முகம், அறிவியல் மன்ற  ஆசிரியர் சிவகாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி ஜெயலட்சுமி, பெரி யாரிய அமைப்பு துரைசாமி, தினேஷ்  உள்ளிட்ட பலர் உரை யாற்றினர்.  நிறைவாக தமுஎகச மாவட் டத் தலைவர் கணேசன் நன்றி  கூறினார். இதில் பெருந்திரளா னோர் பங்கேற்றனர்.