திருப்பூர், டிச. 10- திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 74 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள் ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக் கான வேட்பு மனு தாக்கல் திங்கள் முதல் பெறப்பட்டு வரும் நிலையில், இரண்டாவது நாளான செவ்வா யன்று 74 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 65 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 8 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இரண்டாம் நாள் முடிவில் 114 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.