திருப்பூர், நவ.1 - திருப்பூர் மாவட்டம், காங்கே யத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 350 மாணவர்கள் படித்து வரும் நிலையில், இங் குள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு தூய்மைப் பணியா ளர்கள் இல்லாததால் மாணவர் கள் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். காங்கயம் நகராட்சி, பாரதி யார் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில்மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு தனியார் பின்னலாடை நிறுவ னம் ஒன்று ரூ.6 லட்சம் மதிப் பில் இரண்டாண்டுகளுக்கு முன்பு கழிப்பறை அமைத்துக் கொடுத் தது. ஆனால் இந்தக் கழிப்பறை களைப் பராமரிப்பதற்கு காங்க யம் நகராட்சி மூலம் துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்படா ததால் மாணவ, மாணவிகள் அந்த கழிப்பறையைப் பயன்படுத்துவ தில் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், இந் தப் பள்ளிக்கு புதிய கழிப்பறை கட்டப்பட்ட பின்னர் நிரந்தரமாக அன்றாடம் பள்ளிக் கழிப்பறைப் பராமரிப்புக்காக துப்புரவுப் பணி யாளரை நியமிக்கவில்லை. வாரத் துக்கு ஒரு நாள் அல்லது இரு நாட்களோதான் துப்புரவு செய்யப் படுகிறது. இது போதுமானதாக இல்லை என்றனர். இது தொடர்பாக, பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகை யில், வட்டாரக் கல்வி அலுவ லர் மூலம் பலமுறை நகராட்சி நிர் வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் தினசரி சுத்தம் செய்வ தற்கு துப்புரவுப் பணியாளரை நியமிக்காததால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கழிப்பறைக்கு செல்ல முடியாத தால், பல மாணவர்கள் உடல்நல பாதிப்புக்கு ஆளாகும் அவல நிலை உள்ளது. பலமுறை நகராட்சி நிர் வாகத்திடம் முறையிட்ட பின்னர், கடந்த வாரத்தில் ஒரு முறை மட்டும் நகராட்சித் துப்புரவுப் பணியாளர் மூலம் துப்புரவு செய் யப்பட்டது. 350மாணவ, மாணவி கள் கழிப்பறையைப் பயன்படுத் தும் நிலையில், தினசரி பள்ளிக் கழிப்பறையை சுத்தம் செய்ய பணியாளரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். இது குறித்து இப்பகுதி பொது நல ஆர்வலர்கள் கூறியபோது, உள்ளாட்சி நிர்வாகங்களின் எல் லைக்குள் உள்ள பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல் வித்துறையின் கீழ் இயங்கும் அர சுப் பள்ளிகளில் துப்புரவுப் பணி களை மேற்கொள்ளும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளி யிட்டுள்ளது. நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நகராட் சிப் பணியாளர் மூலமாகவோ அல் லது தினக்கூலி பணியாளர் மூலமா கவோ பள்ளிக் கழிப்பறைகளின் துப்புரவுப் பணியை மேற்கொள்ள வேண்டும், துப்பரவுப் பணியாளர் களின் பணியினை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் கண் காணிக்க பொறுப்பு வழங்க வேண்டும். துப்புரவுப் பணிக்கான பொருள்கள் மற்றும் உபகரணங் களை உள்ளாட்சி நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட விதிமுறைகள் இந்த அர சாணையில் கூறப்பட்டுள்ளன. பள்ளிக் கழிப்பறைகளின் துப் புரவு செலவினத்தை நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக் கும் கல்வி வரியிலிருந்தோ அல் லது திடக்கழிவு மேலாண்மை நிதி யிலிருந்தோ வழங்க வேண்டும் எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நகராட்சி நிர் வாகம் மூலம் வசூலிக்கப்படும் கல்வி வரியை பள்ளிக் கழிப்ப றைகளை துப்புரவு செய்யப் பயன்படுத்தாமல் இருப்பது நியாயமற்றது. அரசுப்பள்ளிக ளின் நிலை இப்படி இருந்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர் களை எப்படிப் படிக்க வைப்பது? எனவே, பள்ளிக் கழிப்பறைகளை தூய்மை செய்ய தினசரி பணி யாளர்களை அனுப்ப வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர். மேலும் காங்கயம் நகரப் பகுதி பள்ளிகளின் நிலை இது தான். காங்கயத்தில் காவல் நிலை யம் முன்பு செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி, அகிலாண்ட புரம் தொடக்கப்பள்ளி, அகஸ்தி லிங்கம்பாளையம் தொடக்கப் பள்ளி, காங்கயம் பேருந்து நிலை யம் அருகே, பழையகோட்டை சாலையில் உள்ள ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளி ஆகிய நகராட்சிப் பகுதியில் உள்ள அர சுப் பள்ளிகளின் கழிப்பறைகளின் தினசரி பராமரிப்புக்கென பணி யாளர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.