tamilnadu

img

நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்,அக்டோபர்.08- நாட்டு வெடிகுண்டு தயாரிக்க முற்பட்டதால் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் சத்யா காலனியில் கார்த்திக் என்பவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும்போது வெடிகுண்டுகள் வெடித்ததில் 9 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அருகில் இருந்த 10 வீடுகள் தேசதமடைந்துள்ளன.
இந்நிலையில் அவரது வீட்டிலிருந்த மீதமுள்ள வெடிகுண்டுகளை கைபற்றி போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.