tamilnadu

நொய்யலில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆத்துப்பாளையம் அணை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர், ஆக. 11 – நொய்யல் ஆற்றில் இருந்து இரு பது  ஆண்டுகளுக்குப் பிறகு ஆத்துப் பாளையம் அணையின் மூலம் விவ சாய நிலங்கள் பயன்பெறும் வகை யில் பாசனத்துக்குத் தண்ணீர் விடப் பட்டுள்ளது. திருப்பூர் சாய ஆலைகளில் பூஜ் ஜியக் கழிவு மறுசுழற்சித் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் விளைவாக நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படு வது வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு இல்லாத சுத்தமான தண்ணீர் செல்லும் நிலையில் விவ சாயப் பாசனத்துக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.

1990களுக்குப் பிறகு திருப்பூரில் இருந்து வெளியேற்றும் சாயக்கழிவுடன் சேர்ந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் கடுமையாக மாசு பட்டதால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து விவசாயப் பாச னத்துக்குத் தண்ணீர் திறப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரி வித்தனர். அத்துடன், நீதிமன்றத் தின் மூலமும் சட்டப் போராட்டம் நடத்திய நிலையில் ஒரத்துப்பாளை யம் அணையில் இருந்து மாசுபட்ட தண்ணீரை விவசாயப் பாசனத்துக் குத் திறப்பதற்குத் தடை விதிக்கப் பட்டது.

இருப்பினும் நொய்யல் பாச னப் பகுதிகளில் மாசுபட்ட நீரின் தாக்கத்தின் காரணமாக விவசாயப் பாசனம், கால்நடைகள் மற்றும் குடி நீராதாரம் மோசமாக பாதிக்கப் பட்டது. 2011ஆம் ஆண்டு திருப்பூர் சாய ஆலைகள் மறுசுழற்சித் தொழில்நுட் பத்தைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறி அனைத்து சாயஆலை களையும் மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடும் அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், திருப்பூர் சாய ஆலைக ளில் படிப்படியாக மறுசுழற்சித் தொழில்நுட்பம் நிறுவப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் வெளியேறு வதும் கணிசமாக மட்டுப்பட்டது. இதற்கிடையே நொய்யல் ஆற்றி லும், ஒரத்துப்பாளையம் அணையி லும் வெளியேறும் தண்ணீரின் டிடிஎஸ் உப்புத்தன்மை அவ்வப் போது ஆய்வு செய்யப்பட்டும் வந் தது. இதில் கடும் அடர்த்தியான மாசு பாடு படிப்படியாகக் குறைந்து வந்த தும் தெரிந்தது. திருப்பூர் சாயத் தொழில் துறையில் மறுசுழற்சித்  தொழில்நுட்பம் அமலுக்கு வந்து ஏறத்தாழ 10 ஆண்டு காலம் ஆன நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யும் காலங்களில் தண்ணீர் சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் விவ சாயப் பாசனப் பகுதிகளுக்குத் தண் ணீர் திறந்து விடுவது தொடங்கியுள் ளது. இந்த ஆண்டு ஒரத்துப்பாளை யம் அணையில் மழைநீர் தேக்கப்ப டாமல், சின்ன முத்தூர் தடுப்பணை யில் தடுக்கப்பட்டு, ஊட்டுக்கால் வாய் மூலம் 10 கி.மீ., தொலைவில் உள்ள ஆத்துப்பாளையம் அணைக்கு திருப்பி விடப்பட்டுள் ளது.

3 கி.மீ., நீளம் கொண்ட ஆத்துப் பாளையம் நீர்த் தேக்கத்திற்கு நீர் செல்கிறது. ஆத்துப்பாளையம் நீர்த் தேக்கம் மூலமாக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவில் 20 ஆயி ரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. ஏறக்குறைய 20 வரு டம் கழித்து நொய்யல் ஆற்று நீர், பாசனத்திற்குப் பயனடைவது குறிப்பிடத்தக்கது. நொய்யலில் 30  ஆண்டுகளாக இருந்த சாயக் கழி வெல்லாம், நொய்யல் ஆற்று நீரால் 2018ஆம் ஆண்டில் சுத்தமாக மாறி யதை திருப்பூர் பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் பள்ளி மாணவ, மாண விகள் 5 பேர் ஆய்வை மேற்கொண்டு நிரூபித்தனர்.

இந்த ஆய்வு முடிவை தமிழக அரசுக்கும், பிரதமருக்கும் கடி தம் மூலம் தெரிவித்து, மழை காலத் தில் நொய்யலில் வரும் நீரை விவசா யத்திற்கு பயன்படுத்தலாம் என பரிந்துரைத்தனர். பொதுப்பணித் துறையினர் சின்னமுத்தூர் தடுப்ப ணையில் தடுத்து, நீரை ஆத்துப்பா ளையம் அணைக்கு திருப்ப வே ண்டும் என்றும்  மாணவர்கள் கேட்டிருந்தனர்.

இதனடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று நொய்யல் ஆற்றில் வந்த நீரானது ஆத்துப்பாளையம் அணைக்கு திருப்பப்பட்டது. தற்போது 4 நாளாக நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் சின்னமுத்தூர் தடுப்பணை மூலம் ஆத்துப்பாளையம் அணைக்கு செல்கிறது. இதனால் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரத் துப்பாளையம் அணை கட்டப்பட்ட தன் நோக்கம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு  நல்ல நீர் செல்வதால் நிறை வேறியுள்ளது என தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தைச் சேர்ந்த ஆ.ஈசுவ ரன் தெரிவித்தார்.