tamilnadu

img

சிஏஏவுக்கு எதிராக வாணியம்பாடியில் 8ஆவது நாளாக தொடர் போராட்டம்

ஆம்பூர், பிப். 26- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் அனைத்து ஜமாத்து கள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை  ரத்து செய்யக் கோரியும், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகி யவற்றை அமல்படுத்தக் கூடாது என 8 ஆவது  நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.  போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாதர்  சங்க செயலாளருமான  எஸ்.டி.சங்கரி, வாணி யம்பாடி தாலுகா செயலாளர் இந்துமதி ஆகி யோர் கலந்து கொண்டு பேசினார். இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் சுலைமான்சேட், அந்திரிதாஸ் (மதிமுக), பேச்சாளர் நெளஷாத் (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்) ஆகியோரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினர்.

;