tamilnadu

குடிசை வீட்டில் தீ

திருப்பத்தூர், ஆக. 22- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத்  நகர் பகுதியில் வசிப்பவர் சைபுல்லா (24). இவர் சிமெண்ட்  கடையில் வேலை செய்கிறார். இவர் தனது தாய் மற்றும் 3 தங்கைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை ஆலங்காயம் அடுத்த ஜமுனா முத்தூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் அவரது குடிசை வீடு நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீட்டில்  இருந்த நகை, பணம், அரசு ஆவணங்கள், உணவுப் பொருட்  கள், ஆடைகள் என அனைத்தும் எரிந்து நாசமானது.