tamilnadu

துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற நான்கு பேருக்கு ரூ.4 லட்சம் அபராதம்

திருநெல்வேலி. ஜூன் 11- சிவகிரி அருகே வனப்பகுதிக்குள் துப்பாக்கி யுடன் வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற 4 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வன விலங்குகள் அடிக்கடி வேட்டையாடப்படுகின்றன. இதனை தடுக்க கோரி வனத்துறையினருக்கு கோரிக்கை கள் சென்றன. சிவகிரி தெற்குப் பிரிவு கருப்பசாமி கோவில் பீட் வனப்பகுதியில் சிலர் முயல், காட்டுபன்றி கள், மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றிருப்பதாக வனத்துறையின ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சிவகிரி ரேஞ்சர் சுரேஷ் தலைமை யில் சிவகிரி தெற்குப்பிரிவு வனபழகுநர் பூவேந்தன், வடக்கு பிரிவு வனவர் முருகன், வாசுதேவநல்லூர் வனப்பிரிவு வனவர் உபேந்திரன், வனக்காப்பாளர்கள் இம்மானுவேல், சுதாகர், பாரதி கண்ணன், வனக்காவ லர் செல்வராஜ், வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆனந்தன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன் ஆகி யோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் கருப்பசாமி கோவில் பீட் வனப்பகுதி யில் உள்ள தனியார் தோட்டம் பகுதியில் சென்ற போது, அங்கு நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற ஆத்துவழி கிராமம் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமமூர்த்தி (வயது 56), ராமமூர்த்தி மகன் செல்வகுமார் (21), விசுவ நாதப்பேரி பாரதி தென்வடல் தெருவைச் சேர்ந்த முரு கேசன் மகன் சூரியபிரகாஷ் (27), சண்முகவேல் மகன் ஜெகநாதன் (53) ஆகியோரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடு வதற்காக நாட்டுத் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாடி கறி சமைத்து சாப்பிடுவதற்காக வந்தது தெரிய வந்தது.மாவட்ட வன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.