மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருநெல்வேலி, டிச.14- ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பான்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி அருண்(31). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டில் மின் மோட்டார் வைத்து பயன்ப டுத்தி வந்தார். இந்நிலையில் வீட்டில் பின்புறம் உள்ள மின் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அருண் சம்பவ இடத்தி லேயே அசையாமல் நின்றார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சிய டைந்து, கம்பை வைத்து தட்டினர். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை உற வினர்கள் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதா பமாக உயிரிழந்தார். ஆலங்குளம் மருத்துவ மனையில் இருந்து அவரது உடலை உடற் கூராய்விற்காக மருத்து வர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
பணிவரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழங்குக! வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் சங்கம் கோரிக்கை
நாகர்கோவில், டிச.14- வங்கி நகை மதிப்பீட்டாளர்களுக்கு பணி வரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழ ங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் சங்க பேரவை கூட்டம் நாகர்கோவில் வட சேரி ஸ்ரீமுத்துக்குமார் திருமண மண்டப த்தில் சனியன்று நடைபெற்றது. சங்க தலைவர் எஸ்.அருணா தலைமை வகித்தார். முன்னாள் சங்க செயலாளர் எஸ்.சடகுட்டி செயலாளர் அறிக்கை சமர்ப்பித்தார். எம்பி ஏ.வி.பெல்லா ர்மின், சட்ட ஆலோசகர் பாரதி கண்ணன், குமரி மாவட்ட தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் எஸ்.ராமச்சந்திரன், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாவட்ட பொதுச்செயலாளர் எ.ஷாகுல் ஹமீது, தமிழ்நாடு சிண்டிகேட் வங்கி நகை மதிப்பீட்டாளர் சங்க தலைவர் எஸ்.பத்மநாபன், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ஜி.செலஸ்டின், நகை மதிப்பீட்டாளர் சங்க பொருளாளர் ஆர்.ஆறுமுகம், துணைத்த லைவர் இ.சிவகுமார் வரவேற்றார் ஆகி யோர் பேசினர். இதில், வங்கிகளில் நகை மதிப்பீட்டா ளர்களுக்கு மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு, பணிவரன் முறை செய்யப்பட்டு காலமுறை ஊதியமும், வங்கி ஊழியர்களுக்கு இணையான இதர சலுகை களும், ஓய்வூதியபலன்களும் முறையாக வழங்க வேண்டும், நகை மதிப்பீட்டு கட்ட ணத்தை உயர்த்தி இதர பொதுத்துறை வங்கிக ளில் அளிக்கப்படுவது போல, குறைந்த பட்சமாக வங்கி இணைப்பின் போது ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூரில் வழங்கப்பட்ட மதிப்பீட்டு கட்டணம் முழுமையாக அமல்ப டுத்த வேண்டும், எல்ஐசி மற்றும் சில வங்கி கள் உட்பட இதர பொதுத்துறை நிறுவ னங்களில் ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி முறை யில் பணியாற்றியவர்களை கல்வித்தகுதி பணி மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணிவரன் முறை, நிரந்தர பணியிடங்களில் முழுநேர மற்றும் பகுதி நேர ஊழியர்களாக நியமித்தது போல வங்கியில் நகை மதிப்பீட்டாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீக்கம்
திருநெல்வேலி, டிச.14- நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும். இதில் குளிக்க தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து அணைகளில் இருந்து உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் பாதை தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த நவ.28 ஆம் தேதி முதல் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அகஸ்தியர் அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது. அன்று முதல் தொடர் மழையால் தொடர்ச்சியாக 15 நாட்கள் இந்த தடை நீடித்தது. தற்போது ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.