துணை ஆட்சியர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு
திருநெல்வேலி, செப். 8- நெல்லை தச்சநல்லூரில் நள்ளிரவு மர்ம ஆசாமி வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் மனைவியிடம் பத்து பவுன் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை தச்சநல்லூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். ஓய்வு பெற்ற துணை ஆட்சியர். இவரது மனைவி கோமதி (65). இவர்களுக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். அவர்கள் அனை வருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்ற னர். கோமதிக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளதாம். இதையடுத்து சனிக்கிழமை அவர் மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். பரமசிவமும் அதே அறையில் தூங்கி யுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் முன்பக்க கதவை சிறந்த மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்கு வந்துள்ளார் அவர்கள் தூங்கி கொண்டு இருந்த அறையின் கதவு திறந்து கிடைக்கவே உள்ளே நுழைந்த அந்த ஆசாமி கோமதி கழுத்தில் கிடந்த சுமார் 10 பவுன் சங்கிலியை பறித்து உள்ளான் ஏற்கனவே மாத்திரை சாப்பிட்டு தூங்கியதால் கோமதிக்கு உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை என தெரிகிறது. இதையடுத்து அவர் தனது கணவரிடம் யாரோ மர்ம ஆசாமி ஒருவர் வந்துவிட்டு செல்வதுபோல் தெரிகிறது என்று கூறியுள்ளார் அவர் எழுந்து பார்ப்பதற்கு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் இதன் பின்னர் அவர் கழுத்தில் இருந்த 10 பவுன் சங்கிலி மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவிக்கவே அவர்களும் அந்த பகுதி முழுவதும் தேடி யுள்ளனர். பின்னர் டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பளத்து க்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரயிலில் அடிபட்டு லாரி ஓட்டுநர் பலி
தூத்துக்குடி, செப். 8- தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு இளைஞர் பரிதாப மாக பலியானார். தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு முத்துநகர் ரயில் சனியன்று இரவு புறப்பட்டு சென்றது. இந்த ரயில் 3ஆவது ரயில்வே கேட் மேம்பாலம் அருகே சென்ற போது, தண்டவா ளத்தை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடம் சென்று உடலை தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில்,இறந்தவர் டூவிபுரம் 6ஆவது தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் முத்துராமலிங்கம் (38) என தெரிய வந்தது. லாரி ஓட்டுநராக உள்ளார். திருமண மாகி மனைவி, மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சைனிக் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி, செப். 8- தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த படைவீரர் மற்றும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் உடுமலைப்பேட்டை சைனிக் பள்ளியில் 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளி யிட்ட செய்திக் குறிப்பு: திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை அருகேயுள்ள அமராவதி நகர், சைனிக் பள்ளியில் 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் 2020-2021ஆம் கல்வியாண்டில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ஜன.5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், 25 சதவீத இடங்கள் படைவீரர் மற்றும் முன்னாள் படைவீரர் குழந்தை களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படைவீரர் மற்றும் முன்னாள் படை வீரர் குழந்தைகள் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.sainikschoola maravathinagar.edu.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்க ளுக்கு தூத்துக்குடியில் உள்ள முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள லாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 பவுன் நகையுடன் சிறுமி கடத்தல்: தந்தை புகார்
தூத்துக்குடி, செப். 8- செய்துங்கநல்லுார் அருகே திருமண ஆசை காட்டி தனது மகளை , இளைஞர் கடத்தி விட்டதாக அவரது தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லுார் அரு கிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது பெண். இவர் கடந்த 6ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அப்பெண்ணின் தந்தை செய்துங்கநல்லுார் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், அதே பகுதியினை சேர்ந்த மாடசாமி மகன் முருகே சன் (22) என்பவர் தனது மகளுக்கு திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று விட்டதாகவும், கடத்திச் செல்லும்போது, வீட்டில் வைத்திருந்த சுமார் 40 பவுன்நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டதாக கூறி யுள்ளார். சிறுமி கடத்தப்பட்டது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரண்டையில் மாயமான பெண் பாளை.யில் பிணமாக மீட்பு திருநெல்வேலி, செப். 8- நெல்லை சுரண்டையில் மாயமான பெண் பாளையில் பிணமாக மீட்கப்பட்டார். நெல்லை மாவட்டம் சுரண்டை வரகுணராமநாத புரத்தைச் சேர்ந்தவர் பால்சாமி. விவசாயி. இவர் கடந்த சில வருடங்கள் முன்பு இறந்து விட்டார். இதையடுத்து இவரது மனைவி பால்தாய் (64). தனது மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி திருச்செந்தூரு க்கு செல்வதாக அவரது மகன்களிடம் கூறியுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன்கள் அக்கம்பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே பாளை., வெள்ளக்கோயில் பகுதியில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையின ருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலதுறையினர் மூதாட்டி யின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் அவர் சுரண்டையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.