திருநெல்வேலி, ஆக.1- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த வர் நீலா. இவரது கணவர் அழகுசுந்தரம், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இடை யே அடிக்கடி சண்டை வருமாம். 2 தினங் களுக்கு முன் மீண்டும் பிரச்சனை வந்துள் ளது. இதில் கோபத்தில் நீலா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தன் சொந்த ஊரான திருச்சி க்கு தனது தாய் வீட்டிற்கு செல்ல முடிவெ டுத்தார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பேருந்துகள் இயக்கப்படாத தால் நடந்தே சென்றார். இதில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து சுமார் 70 கி.மீ. தூரமுள்ள கோவில்பட்டி அருகே அவர் நடந்து சென்ற போது ரோந்து பணியில் இருந்த பெண் காவ லர்கள் விசாரித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று நீலா வின் வீட்டிற்கு தகவல் கொடுத்து அறி வுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.