tamilnadu

img

எதிர்க்கட்சியே இல்லாத நாடாக மாற்ற துடிக்கும் பாஜக நெல்லையில் சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்

திருநெல்வேலி, ஜுலை 13- இந்துத்துவா ராஷ்டிரம் என்கிற தனது நோக்கத்தை வேக மாக நிறைவேற்ற பாஜக துடிக்கி றது. அதற்காக சாதிய கட்ட மைப்பை வலுப்படுத்த முயற்சிக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பின்னணியில் நாடு முழுவதும் சாதிய சக்திகள் வலுப்பெறும் இன்றைய சூழ்நிலை யில் அசோக் படுகொலை நடந் துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி சுட்டிக் காட்டினார். திருநெல்வேலி அருகே கரை யிருப்பு கிராமத்தில் கடந்த மாதம் (ஜுன்) 12 ஆம் தேதி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அசோக் சாதி வெறி யர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படு கொலையை கண்டித்து பாளை. சித்தமருத்துவக் கல்லூரி திடலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி.உச்சி மாகாளி தலைமையில் வெள்ளி யன்று (ஜுலை 12) பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:  திருநெல்வேலி மண் விடு தலைப் போராட்டத்தில் மிகப் பெரிய பங்களிப்பை செலுத்தியுள் ளது. பாரதியார், வஉசி ஆகியோர் மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என மகத்தான இயக்கங்களை நடத்திய மண். அத்தகைய வரலாற்றை பின் னோக்கி இழுப்பதற்கான சாதிய சக்திகளின் முயற்சிகளை நாம் பார்த்து வருகிறோம். அத்தகைய முயற்சிகளுக்கு பாஜக ஊக்கம ளிக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பின்னணியில் நாடு முழுவதும் சாதிய சக்திகள் வலுப்பெறும் இன்றைய சூழ்நிலை யில் அசோக் படுகொலை நடந்துள் ளது. தோழர் அசோக்கிற்கு வீர வணக்கம். இத்தகைய தாக்குத லுக்கு எதிராக முன்னிலும் இரட் டிப்பு வீரியத்துடன் நமது போராட் டங்களை முன்னெடுத்தாக வேண்டும்.  பாஜக தனது இந்துத்துவா ராஷ்டிரம் என்கிற நோக்கத்தை வேகமாக நிறைவேற்றத் துடிக்கி றது. அதற்காக சாதிய கட்ட மைப்பை வலுப்படுத்த முயற்சிக்கி றது. அனைவரும் சமம் என்கிற நமது அரசியல் அமைப்பு சட் டத்தின் அடிப்படையை தகர்க்க பாஜக முயற்சிக்கிறது. இந்துத் துவா ராஷ்டிரா என்கிற இலக்கை எட்டுவதற்காக நடத்தப்படும் சாதிய மோதல்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெ டுக்க வேண்டும். ஒற்றை மதம், ஒற்றை கலாச்சாரம், ஒரே மொழியை திணிக்க ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை என்கிற குணத்தை பாதுகாக்க வேண்டும். அத்தகைய போராட்டத்தில் தனது இன்னுயிரை தோழர் அசோக் தியாகம் செய்துள்ளார்.

கர்நாடகா, கோவா குதிரை வியாபாரம்
மத்திய அரசு இந்தியாவை எதிர்க் கட்சியே இல்லாத நாடாக மாற்ற விரும்புகிறது. கார்ப்பரேட் நிறுவனங்க ளிடமிருந்து பெற்ற அதிகப்படியான பணத்தை வைத்து சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள். கர்நாடகத்திலும், கோவாவிலும் அத்தகைய குதிரை வியாபாரம் நடத்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பிரச்ச னைகள் உள்ளன. அந்த கட்சியை சரி  செய்வது காங்கிரஸ் கட்சியினரின் பொறுப்பு. ஆனால், எதிர்க்கட்சி இல்லாத இந்தியா என்கிற முழக்கத்து டன் மதச்சார்பின்மையை அழித்து பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்டிராவை அமைக்க பாஜக முயற்சி்க்கிறது. அதேபோல மத்திய அரசு தனக்கு எதிரான எந்த குரலையும் அனுமதிப்ப தில்லை என்பதில் உறுதியாக உள்ளது. தமக்கு எதிராக எழும் குரல்களை ஒடுக்கு வதில் தீவிரமாக உள்ளது. இருதினங்க ளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் தலை சிறந்த வழக்கறிஞர்களின் இல்லங்களில் சிபிஐ சோதனை நடந்துள்ளது. அவர்கள் இந்தியாவில் மனித உரிமை கள் குறித்தும், தலித்துகள், சிறுபான்மை யினர் நலனுக்காகவும் பல்வேறு மாநி லங்களில் நடந்த கும்பல் படுகொலைக ளுக்கு எதிராகவும் வழக்கு நடத்திய வர்கள் மீது சோதனை என்கிற பெயரில் அவர்களது குரல்களை ஒடுக்க பாஜக அரசு முனைந்துள்ளது. தேசிய நலன்க ளுக்காக இதை செய்யவில்லை. இந்துத்துவா தேசியவாதத்தின் பெயரால் இவற்றை செய்கிறார்கள்.

                                                                                                                                                   சாதி-மத மோதல்கள்
மக்கள் விரோத நடவடிக்கைகள் இந்த அரசில் மேலும் மேலும் அதிக ரித்துக் கொண்டிருக்கிறது. அண்மை யில் பெட்ரோல், டீசல் விலைகளை  உயர்த்தினார்கள். பொதுத்துறை நிறுவ னங்களை தனியாரிடம் ஒப்படைக்கி றார்கள். நெருக்கடியிலிருந்து விவசாயி களை மீட்பதற்கு ஏதும் செய்யாமல் அவர்களது பயன்பாட்டில் உள்ள நிலங்க ளைப் பறித்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்கிறார்கள். இத்தகைய தங்களது இந்துத்துவா பாசிஸ்ட் ஆட்சியை தொடர்வதற்காக இந்து-முஸ்லிம், கீழ்சாதி-மேல்சாதி மோதல்களை திட்டமிட்டு உருவாக் குகிறார்கள். இந்திய அரசியல் சட்டத் தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் மாண்புகளை அவர்க ளது இந்துத்துவா ராஷ்டிரத்துக்காக சீர்குலைத்து வருகிறது பாஜக அரசு. ரிசர்வ் வங்கி, சிபிஐ, தேர்தல் ஆணை யம், நீதித்துறை, நாடாளுமன்றம் போன்றவற்றை சிறுமைப்படுத்தி வருகிறார்கள்.

 

மார்க்சிஸ்ட்டுகளால் முடியும் 
நடந்து முடிந்த தேர்தலில் இடது சாரிகளும் சரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சரி கடுமையான பின்னடைவை சந்தித்திருக்கிறீர்களே, நீங்கள் பட்டிய லிடும் இந்த தாக்குதல்களை முறியடிக்க உங்களால் முடியுமா என்று மற்றவர் கள் கேட்கிறார்கள். நாங்கள் அறிவிக்கி றோம், இந்தியாவை பாதுகாக்கிற மகத் தான போராட்டத்தை இடதுசாரிகளால், மார்க்சிஸ்ட்டுகளால், கம்யூனிஸ்ட் கட்சி யால் நடத்த முடியும். இந்தியா இப்போது தீவிர வலது சாரி பிற்போக்கு அரசிடம் சிக்கியி ருக்கிறது. அதிலிருந்து மீட்டு பாது காப்பான-சிறப்பான இந்தியாவை உரு வாக்க மக்களை நாடிச் செல்வோம். அவர்களுடன் உரையாடி மாற்றத்தை உருவாக்க இடதுசாரிகளால், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும். தேர்தலில் கிடைத்த படிப்பினை களை பரிசீலித்து எங்களிடம் உள்ள குறைகளை சரி செய்துகொள்வோம். மக்களை அணிதிரட்டும் பணியை மேற் கொள்வோம். இந்தியாவை பாது காப்போம், இந்தியாவை மாற்றுவோம் என்கிற முழக்கத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறோம். அந்த முழக்கத் தின் தியாகிதான் தோழர் அசோக்.

ஹிட்லரை தோற்கடித்தது செங்கொடிதான்
பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்தியாவில் இடதுசாரிகளை- சிவப்புக் கொடியை ஒழிக்கப்போவதாக கூறு கிறார்கள். இதற்கு முன்பும் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் இதுபோல் கூறினார். ஆனால், ஜெர்மனியில் ஹிட்ல ரின் கொடியை இறக்கி செங்கொடி ஏற்றப்பட்டது. அதை செய்தது அமெரிக் காவோ, இங்கிலாந்தோ, பிரான்சோ அல்ல; சோவியத் யூனியன். செஞ்சேனைதான் ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டதை உல குக்கு அறிவித்தது. இந்தியாவில் உங்க ளுக்கு முடிவு கட்டப்போவது செங்கொடி இயக்கம்தான் என சீத்தா ராம் யெச்சூரி முழங்கினார். அவரது ஆங்கில உரையை தீக்கதிர் மதுரைப் பதிப்பு பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழாக்கம் செய்தார்.