திருநெல்வேலி, நவ.2- சுரண்டையிலிருந்து கீழப்பாவூர் செல்லும் ரோடு பல்லாங்குழி போல் குழிகளாக காட்சி அளிக்கிறது. அதனை நெடுஞ்சாலைத்துறை கவனத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர். நெல்லை மாவட்டம் சுரண்டையிலிருந்து பாவூர்சத்தி ரம் செல்லும் சாலையில் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. நெல்லை- கொல்லம் நெடுஞ்சாலையை இணைக்கும் இச்சாலையில் விவசாயிகள், வர்த்தகர்கள், கல்லூரி பேருந்துகள் என தினமும் ஆயிரக்கணக்கில் சென்று வருகிறது. இதில் இடையர்தவணை விலக்கிலி ருந்து கீழப்பாவூர் வரை பல இடங்களில் சாலைகள் சிதைந்து, சிதிலமடைந்து கிடக்கிறது. பல இடங்களில் சுமார் ஒரு அடி ஆழம் வரை பள்ளம் விழுந்து உள்ளது. இதில் வாகனங்கள் விழுந்து, எழுவதால் பலர் காயங்க ளுடன் சென்று வருகின்றனர். கடும் மழை பெய்யும் நேரத்தில் இந்த சாலை கூடுதலாக சேதமடைந்து பள்ளங் கள் அதிகமாகிறது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சா லைத் துறையினர் உடனடியாக சுரண்டை கீழப்பாவூர் சாலையினை கவனத்தில் கொண்டு குழிகளை மூடி சீர மைக்க வேண்டும் என இப்பகுதியை சார்ந்த வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.