திருநெல்வேலி, ஜூன் 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் எம்.பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டக்குழு அலு வலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தப் பட்டது. நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.கருமலையான், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், துரை ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வரகு ணன், பீர்முகம்மது ஷா மற்றும் சுப்பிர மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 1942 வங்க பஞ்ச காலத்தில் கம்யூ னிஸ்ட் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர்.
குமாஸ்தாக்கள் சங்கம் உரு வாக்கி சிவகிரி நகரில் செங்கொடி இயக் கத்தை வலுப்படுத்தி விரிவாக்கியவர். விவ சாயிகள் இயக்கத்தினை உருவாக்கி அப்பகுதி விவசாயிகளை செங்கொடி இயக்கத்தின் கீழ் அணிதிரட்டியவர். சிவ கிரி - சங்கரன்கோவில் - கோவில்பட்டி ஆகிய பகுதிகளை இணைத்து வடக்கு பிராந்திய கமிட்டி செயலாளராகவும் பின்னர் ஒன்று பட்ட நெல்லை மாவட்ட செயலாளராக வும் செயல்பட்ட தோழர். கட்சி தடைசெய் யப்பட்ட காலத்தில் தலைமறைவாக இருந்து பணியாற்றியவர். கைது செய்யப்பட்ட பின் சிறையில் கொடும் சித்ர வதைகளை சந்தித்தவர். 2005ம் ஆண்டு கட்சி யின் 18வது அகில இந்திய மாநாட்டில் விடு தலைக்கு முன்பிருந்து பணியாற்றிய தலை வர்களில் ஒருவராக கெளரவிக்கப்பட்ட தோழர்.