tamilnadu

img

நிரம்பி வழியும் வடக்குப் பச்சையாறு விவசாயிகள் மகிழ்ச்சி

திருநெல்வேலி, டிச.29- களக்காடு வடக்கு பச்சை யாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடை ந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கடந்த 2  மாதங்களாக வடகிழக்கு பரு வமழை பெய்தது. இந்த மழை யால் களக்காட்டில் உள்ள தாமரைகுளம், கீழப்பத்தை பெரியகுளம், பத்மநேரி குளம், வடகரை குளம் உள்பட 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பின. இத னால் விவசாயிகள் விவசா யப் பணிகளில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து களக்காட்டில் ஓடும் நாங்கு நேரியான் கால்வாய், உப்பாறு, பச்சையாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரி த்தது. இதுபோல களக்காடு வடக்கு பச்சையாறு அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதியான கீரைக்காரன் தொண்டு பகு தியிலும் மழை கொட்டியதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் தலையணையில் இரு ந்து ஊட்டு கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. 50  அடி உயரம் கொண்ட அணை  சனிக்கிழமை நிரம்பி வழி ந்தது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் வழிந்தோ டுகிறது. இந்த அணையின் மூலம் 110 குளங்களும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநி லங்களும் பயனடைகின்றன. அணையில் இருந்து உபரி நீர் வழிந்தோடும் பகுதியில்  இளைஞர்கள் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர். அணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடை ந்துள்ளனர்.

;