tamilnadu

img

டாஸ்மாக் கடைகள் திறப்பு சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, மே 7- மக்களின் வாழ்வா தாரத்தை சீர்குலைக் கும் மதுக்கடைகளை திறந்து கொரோனா வைரஸ் பரவுவதற்கு உதவி செய்யும் தமி ழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் தூத்துக் குடி மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாநகர் செயலாளர் தா.ராஜா, வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.எஸ்.முத்து, சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளர் இசக்கி முத்து, வரதன்,  முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  இரா.பேச்சிமுத்து, புறநகர்ச் செயலாளர் பா. ராஜா, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் பா.டேனியல்ராஜ், புறநகர் குழு உறுப்பினர் மா.சுப்பையா போக்குவரத்து தி.கண்ணன் அய்யலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டன இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரி வித்து ரெட்டியார்பட்டியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு அலுவல கத்தில் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்க ரன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஜெயராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் பா.வரகுணன், மற்றும் சுப்பிரமணியன் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

;