tamilnadu

நெல்லையில் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி பாதிப்பு எண்ணிக்கை 329 ஆக உயர்வு

திருநெல்வேலி, மே 26- நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள் ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் ஆரம்பத்தில் திருநெல்வேலியில் கொரோனா பாதித்த வர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தால் பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கி யது. ஆனால் சென்னை உட்பட வெளி மாவட்டங்களிலிருந்து திரும்பியவர்களால், தற்போது கொரோனா தொற்றால் பாதித்த வர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி யுள்ளது.  இந்நிலையில் திருநெல்வேலியில் செவ்வாயன்று மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத னால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது.