tamilnadu

திருநெல்வேலி முக்கிய செய்திகள்

புற்றுநோய் பாதித்த சிறுநீரகத்தை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை

திருநெல்வேலி, அக்.2- நெல்லை அரசு பல்நோக்கு உயா் மருத்து வமனையில் புற்றுநோய் பாதித்த சிறுநீர கத்தை வெற்றிகரமாக அகற்றி மருத்து வர்கள் சாதனை படைத்துள்ளனா். இதுதொடர்பாக நெல்லை  அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எஸ்.எம். கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  புளியங்குடியைச் சேர்ந்த கருப்பையா (80) கடுமையான வயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற காரணங்களால் மருத்து வரை அணுகியுள்ளார். இதையடுத்து அவ ருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், இடது சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டி ருந்ததும், அது சிறுநீரக சிரை வழியாக பெருஞ் சிரை வரை பரவியிருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது. அது முற்றி ஆபத்தான நிலையில் இருந்தது.இதையடுத்து அவா்  நெல்லை அரசு பல்நோக்கு உயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு புற்றுநோய் மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை நிபு ணர்களின் கூட்டு முயற்சியால் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட இடது சிறுநீரகம், இடது சிறுநீரக சிரை ஆகியவற்றை அகற்றி யதோடு, பெருஞ்சிரை வரை பரவியிருந்த புற்றுநோய்க் கட்டிகளையும் அகற்றப்பட்டுள் ளது. இந்தப் புற்றுநோய் பெருஞ்சிரை வழி யாக இதயம் வரை பரவும் தன்மை கொண்டது. இதுபோன்ற நோய்களுக்கு தற்போது  நெல்லையிலே சிகிச்சை பெறும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகர மாக மேற்கொண்ட புற்றுநோய் அறுவை சிகிச்சை துறைத் தலைவா் சுந்தரம், துணைப் பேராசிரியர் தீபா, ரத்த நாள அறுவை சிகிச்சை துறை தலைவா் இளஞ்சேரலாதன், மயக்கவியல் துறைத் தலைவா் அமுதா ராணி ஆகியோருக்கு பாராட்டுகள். இவ்வாறு அவ்வாறு கூறினார்.

நெல்லை - சுரண்டை  இரவு நேர பேருந்தை  சீராக இயக்க கோரிக்கை

திருநெல்வேலி, அக்.2- நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வரும் வர்த்தக நகரமான சுரண்டை பகுதி பொதுமக்களும், வியாபாரி களும், தூத்துக்குடி, நாகர் கோவில், திருச்செந்தூர், ஆகிய பகுதிகளுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்ப திரு நெல்வேலி வந்து செல்வர். இப்பயணிகளுக்கு வசதி யாக கடந்த 15 வருடங்களு க்கு மேலாக நெல்லையிலி ருந்து சுரண்டைக்கு இரவு 10-20 மணிக்கு அரசு பேருந்து இயங்கி வருகிறது. சுரண்டை வழியாக புளி யங்குடி செல்லும் பேருந்தில் திருநெல்வேலியிலிருந்து வருபவர்களும், புளி யங்குடி, ராஜபாளையம், மதுரை போன்ற பகுதிக ளுக்கு செல்பவர்களும் பயணித்து வரும் நிலையில் சுரண்டைக்கு இயக்கப்படும் இந்த இரவு நேர பேருந்து பல நாட்கள் சரிவர இயங்கு வதில்லை என இப்பகுதி பயணிகள் குற்றம் சாட்டு கின்றனர்.  நெல்லை பேருந்து நிலை யத்தில் வேறு கவுண்டரில் போர்ட் இல்லாமல் காத்தி ருக்கும் இந்த பேருந்து ரிப்பேர் என கூறி தென்காசி வழியாக இயக்கப்படுவதும் அதற்கு பணியிலிருக்கும் டைம் கீப்பர்கள் உடந்தை யாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்  பயணிகள் குறிப்பாக பெண்கள் ஆலங்குளம், பாவூர்சத்திரம்,  தென்காசி ஆகிய பகுதிக்கு சென்று சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே நெல்லையிலிருந்து சுரண்டை வழியாக புளி யங்குடிக்கு இயக்கப்படும் இரவு நேர பேருந்தை சீராக இயக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.