திருநெல்வேலி, ஜூன் 3- நெல்லையில் இருந்து நாகர் கோவிலுக்கு செல்லும் பஸ்களில் பய ணிகளுக்கு ஆதார் கார்டு கட்டாய மாக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டத்தில் ‘கொரோனா’ ஊர டங்கிற்கு பிறகு தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. முதல் நாளான திங்களன்று பஸ்களில் பய ணம் செய்ய பயணிகள் அதிக அள வில் வரவில்லை.செவ்வாய்கிழமை அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகரித்தது. நெல்லையில் இருந்து நாகர்கோவில், பாபநாசம், தென்காசி செல்லும் பஸ்களில் கூட்டம் அதிக ரித்தது. இதனால் அந்த பஸ்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க முடி யாமல் இருந்தது.
இதனால் புதனன்று இந்த பகுதி களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட் டன. நாகர்கோவிலுக்கு மட்டும் காலை யில் 10 பஸ்கள் இயக்கப்பட்டன.இத னால் பஸ்களில் சமூக விலகலை கடை பிடித்து 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றினர். இந்தநிலையில் நெல்லையில் இருந்து புதனன்று நாகர்கோவில் சென்ற பஸ்களில் ஆதார்கார்டு உள்ள பயணிகளை மட்டுமே ஏற்றினார்கள். பயணிகளிடம், ‘கண்டிப்பாக ஆதார் கார்டு அல்லது ஆதார்கார்டு ஜெரா க்ஸ் காட்டவேண்டும் அப்பொழுதான் ஏற்றிச் செல்லப்படுவீர்கள்’ என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென் காசியில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் சென்ற பய ணிகளை ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நிறுத்தி பயணிகளின் பெயர், விபரங்களை சேகரித்தனர்.
தேவையில்லாமல் செல்பவர்களை அப்பகுதியில் உள்ள கல்லூரிக்கு அழைத்து சென்று கொரோனா பரி சோதனை நடத்தினர். இதனால் பய ணிகள் மணிக்கணக்கில் காத்திருந்த தால் ஆவேசமடைந்து அதிகாரிகளு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் தான் புதன்கிழமை நெல்லையில் இருந்து நாகர்கோவி லுக்கு செல்லும் பஸ்களில் பயணி களுக்கு ஆதார்கார்டு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. பஸ்நுழைவு வாசலில் கண்டக்டர் நின்று ஆதார் கார்டை சரிபார்த்து, என்ன காரணத்திற்காக செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தி அதன் பிறகே அனுமதிக்கப்பட்டனர். நெல்லையில் இருந்து வேலைக் காக நாகர்கோவில் செல்பவர்களுக்கு ஆரல்வாய்மொழி சோதனை சாவடி யில் எவ்வித பரிசோதனையும் செய் யப்படவில்லை. ஆனால் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு ‘கொரோனா’ பரிசோதனை நடத்தப்படுகிறது. இத னால் ஆதார்கார்டு கேட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திடீரென பஸ் பயணத்திற்கு ஆதார் கார்டு கேட்டதால் பயணிகள் அதிர்ச்சி யடைந்தனர். ஆதார்கார்டு கொண்டு வராத பல பயணிகள் வீடுகளுக்கு திரும்பி சென்று ஆதார் கார்டு எடுத்து வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் மட்டுமில்லாமல் பாபநாசம், தென்காசி, தூத்துக்குடி போன்ற முக்கிய நகரங்களுக்கும் கூடு தல் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணி கள் கூட்ட நெரிசல் இல்லாமல் முககவ சம் அணிந்து சமூகவிலகலை கடை பிடித்து பயணம் செய்தனர். நெல்லை புதிய பஸ் நிலைய மான எம்.ஜி.ஆர். பஸ்நிலையத்தில் மொத்த காய்கறி மார்க்கெட்டு தற்கா லிகமாக இயங்கி வந்தது. இதனால் லாரிகளும் ஒரே நேரத்தில் பஸ்நிலை யத்திற்கு வந்து, போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. ஆனால் புதனன்று லாரி கள் அனைத்தும் பஸ்நிலையத்தின் மேற்கு பகுதியிலும், முன் பகுதியிலும் நிறுத்தப்பட்டது. இதனால் போக்கு வரத்து நெரிசலும் குறைந்தது. பஸ்நிலைய பகுதிகளில் கூடு தல் போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.