திருநெல்வேலி, மே 27-“சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்! தமிழ் சமூகத்தோடு ஓர் பரந்த உரையாடல்” என்ற தலைப்பில் வரும் ஜூலை 15முதல் ஆகஸ்ட் 14 வரை தமிழகம் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெறவிருக்கிறது.நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவுஎடுக்கப்பட்டது.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழு கூட்டம் மே 25,26 ஆகிய 2நாட்கள் குற்றாலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குமுன்னாள் எம்.எல்.ஏ வும் மாநில துணைத்தலைவருமான ஆர்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் அறிக்கை முன்வைத்து உரையாற்றினார். மாநிலக்குழு கூட்டத்தில் துணைப்பொதுச் செயலாளர்கள் செல்லக்கண்ணு, பாரதி அண்ணா, சின்னைபாண்டியன், துணைத்த லைவர் ஜி.ஆனந்தன்,முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.மகேந்திரன், டில்லி பாபு மற்றும் நிர்வாகிகள், மாநிலக்குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநில மாநாடுகூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 15,16,17ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறஉள்ளது. 17ஆம் தேதி மாலை 3 மணிக்குமாபெரும் சாதி ஒழிப்பு பேரணி நடைபெறுகிறது. மாநாட்டை முன்னிட்டு சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம் ! தமிழ் சமூகத்தோடு ஓர் பரந்த உரையாடல் என்றதலைப்பில் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரைமக்கள் மத்தியில் சாதி ஒழிப்பு பிரச்சாரம் நடைபெறும். மக்கள் கூடும் இடங்கள் ,குடியிருப்புக்கள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வயல்வெளிகள் என தமிழகம்முழுவதும் தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களிடமும் சாதி ஒழிப்பு உரையாடல் நடத்துவதுஎன மாநில குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.