tamilnadu

img

தோழர் ஜெயராமன் முதலாம் ஆண்டு நினைவு தினம்

திருநெல்வேலி, ஜூலை 28- நெல்லையில் லிகாய் சங்கத்தின் ( எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம்)  தேசிய குழு உறுப்பினர் ஜெயராமனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாளையங்கோட்டை எல்.ஐ.சி கிளை முன்பு எல்ஐசி லிகாய் சங்கத்தின் திருநெல் வேலி கோட்ட ஸ்தாபகரும் நெல்லை சாத னையாளர் பேரவை யை உருவாக்கியவரும் லிகாய் தேசிய செயற்குழு உறுப்பினருமான  ஜெயராமனின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு  மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.  சங்க பொதுச்செயலாளர் குழந் தைவேல்,தலைமை நிலைய செயலாளர் பால சுப்ரமணியன், ஹாய் யோர்க் ஜெயராமன் நினைவுகளை குறித்து பேசினார்.