tamilnadu

img

நெல்லையில் மின் வாரிய அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்...

திருநெல்வேலி:
உத்தரபிரதேச அரசின் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்தும் தனியார்மயத்தை கண்டித்தும் பாளையங்கோட்டையில் தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு அம்பேத்கார் எம்ப்ளாயீஸ் யூனியன் சிவகுமார் தலைமை தாங்கினார். சம்மேளன நிர்வாகி பெருமாள்சாமி, சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செயலாளர் வண்ணமுத்து, பொறியாளர் சங்கமணிவாசகம்,   ஐக்கிய சங்க தென்கரை மகாராஜன், பொறியாளர் யூனியன் ராமர், மின் ஊழியர் காங்கிரஸ் முத்துக்குமார் முத்தையா, பொறியாளர் கழகம் முருகன் , தொமுச நச்சினார்க்கினியன் ஆகியோர்  பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் பீர் முகமது ஷா, நிர்வாகிகள் கந்தசாமி, தளபதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ,அமமுக  முத்தரம்மன் நன்றி கூறினார்.