tamilnadu

திருத்தம்

25-12-2019 தேதியிட்ட தீக்கதிர் நாளிதழின் 8ஆம் பக்கத்தில் வழிகாட்டும் தியாகச்சுடர் கீழவெண்மணி என்ற தலைப்பிலான சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்டுரையில், “1952 தேர்தலுக்கு முன்னதாகத்தான் கீழத்தஞ்சை வர்க்கப் போராட்ட எழுச்சியின் நாயகன் தோழர் பி.சீனிவாசராவ் இந்த மண்ணுக்கு வந்து சேர்கிறார்” என இடம்பெற்றுள்ளது. அந்த வரிக்கு முன்பு, “மூன்றரை ஆண்டு கால தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர்” என்ற வார்த்தைகளை சேர்த்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  1943ஆம் ஆண்டிலிருந்து தோழர் பி.சீனிவாசராவ் தஞ்சை மண்ணில் பண்ணை அடிமை ஒழிப்புப் போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தி, அதை ஒழித்துக் கட்டிய வீர வரலாறு மகத்தானதாகும். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு குறித்த இந்த பகுதியில் அந்த வரலாறும் இடம்பெற உள்ளது.

- ஆசிரியர்

;