புதுக்கோட்டை, மே 15-முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சேர சிறுவர், சிறுமியர் தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர், சிறுவமியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சிறுவர்களுக்கு சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.மேற்காணும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் உள்ள பின்வரும் காலியாக உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு மற்றம் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்பு சிறுவர், சிறுமியர்களுக்கான தேர்வு 21.5.2019 அன்று காலை 8 மணிக்கு சென்னையிலுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில், தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ் மற்றும் நீச்சல் போட்டியும், சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் தடகளம், இறகுப்பந்து, மேசைப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியும் நடத்தப்பட உள்ளது.விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் 2019-2020-ம் ஆண்டுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை 25.4.2019-ம் தேதி முதல் றறற.ளனயவ.வn.படிஎ.in எனும் இணைய தளம் மூலம் ஆன்-லைன் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து 20.5.2019 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்;. மேலும் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 21.5.2019 அன்று காலை 8 மணி அளவில் மாநில அளவிலான தேர்வு நடைபெறும் போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை என்ற முகவரியில் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.