புதுக்கோட்டை, ஜூலை 4- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க மும் இணைந்து புதன்கிழமை உலக கை கழுவும் தினத்தை வெங்கடேஸ்வரா பள்ளியில் கொண்டாடின. விழாவிற்கு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குழந்தைகள் நல மருத்துவர் ராம்தாஸ் பேசுகை யில், சாப்பிடுவதற்கு முன்பாக கைகழுவி உணவு அருந்தி னால் எந்த நோய்க்கிருமியும் பரவாது, நோய்த்தொற்றும் ஏற்படாது. சோப்பு, ஷாம்பு மற்றும் அடுப்புச் சாம்பலையும் பயன்படுத்தி கை கழுவலாம். நகங்களை சுத்தமாக வைத்துக் கொண்டால் அதற்குள் நோய்க்கிருமிகள் சேராமல் தவிர்க்க லாம். சாப்பாட்டுக்கு முன், பின், கழிவறைக்குச் சென்று வந்த பின்பு கை கழுவுவது அவசியம் என்றார். நிகழ்ச்சியில், கைகழுவுதல் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மருத்துவர் தனசேகரன், ரோட்டரி சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.