tamilnadu

img

100 நாள் வேலையில் புறக்கணிப்பு வெங்கனூர் பெண்கள் போராட்டம்

பெரம்பலூர், மே 10-பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் பெரியம்மாபாளையம் ஊராட்சி வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு, 100 நாள் திட்டத்தில் வேலை வழங்குவதில்லை. சுற்று வட்டார பகுதி கிராமங்களில் எவ்வித பாகுபாடுமின்றி வேலை வழங்கப்படும் நிலையில் தங்கள் கிராமம் மட்டும் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டியும், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் வெள்ளி யன்று வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். பின்னர் இது தொடர்பாக கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்றுக் கொண்டதால் அவர்கள் கலைந்து சென்ற னர்.