நாகப்பட்டினம், ஜூன் 11- நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம் அகஸ்தி யம்பள்ளி உப்பளப் பகுதியாகும். இங்கு நிலத்தடி நீர் என்பது உப்பு நீராகத் தான் இருக்கும். இங்குள்ள மக்கள் கொள்ளி டம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் கிடைக்கு குடிநீரை நம்பியே வாழ்கிறார்கள். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகக் குடிநீர் வழங்கல் இல்லை. மக்களுக்குக் குடிநீர் வழங்கிட உள்ளாட்சி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ, இப்பகுதியின் அமைச்சரோ எவ்வித முயற்சியும் மேற் கொள்ளவில்லை. அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் தீர்வு ஏற்படவில்லை. அதிகப் பணம் கொடுத்துத் தண்ணீர் விலைக்கு வாங்க வேண்டிய நிலை. இந்நிலையில் அகஸ்தியம்பள்ளி பெண்கள் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து காவல்துறையினரும், அதிகாரி களும் போரட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி யளித்ததன் பேரில் பெண்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டார்கள்.