tamilnadu

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு உற்சாக வரவேற்பு

திருச்சிராப்பள்ளி: சர்வதேச குத்துச்சண்டை போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் திருச்சியை சேர்ந்த அரவிந்த் பிரகாஷ் 99 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். திங்களன்று அவர் திருச்சி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது, நான் திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறேன். எனக்கு குத்துச்சண்டை பயிற்சியை சர்வதேச பயிற்சியாளர் விஜயகுமார் அளித்தார். பயிற்சி அளித்த அனைத்து பயிற்சியா ளர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இவர் பூட்டான் நேபாளம் தாய்லாந்து மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்று உள்ளார். தேசிய போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் 8 முறை வென்று பதக்கங்களை பெற்றுள்ளார். இதில் 3 தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

;