tamilnadu

‘வேணாடும் தமிழ் மரபும்’ ஆய்வு நூல் ச.தமிழ்செல்வன் வெளியிட்டார்

நாகர்கோவில், மே 15-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மணலிக்கரை கிளை மற்றும் உருவங்கள் ஊடக ஆய்வு மையம் சார்பில் வ.ஆன்றணி ஜோசப் எழுதிய வேணாடும் தமிழ் மரபும் வரலாற்றுஆய்வு நூல் வெளியீட்டு விழா முளகுமூடு சிகரம் அகாடமி ஆப் எக்ஸலன்ஸ் மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமுஎகச மாவட்ட செயலாளர் ஜெ.எம்.ஹசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மிகையிலான் வரவேற்றார். தமுஎகச மாநில கவுரவ தலைவர் ச.தமிழ்ச்செல்வன் புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார். உருவங்கள் ஊடக ஆய்வு மைய நிறுவனர் ஜாண் இளங்கோ, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் தலைவர் ஜேம்ஸ் ஆர்.டேனியல், தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ஜெயகாந்தன், சிகரம் மைய இயக்குநர் செபா, ஜெரால்டு ஜஸ்டின், யோ.தர்மராஜ், மரிய அற்புதம், தக்கலை மா.பென்னி ஆகியோர் பேசினர். நூலாசிரியர் வ.ஆன்றணி ஜோசப் ஏற்புரையாற்றினார். இதில் எழுத்தாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.