தரங்கம்பாடி, மே 27-அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மே 25 முதல் சைக்கிள் பிரச்சாரம் நடைபெறுகிறது. இதில் ஞாயிறன்றுமயிலாடுதுறை வந்த பிரச்சாரக் குழுவிற்கு வாலிபர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. செம்பனார்கோவில் வந்த பயணக் குழுவைவாலிபர் சங்க வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் வரவேற்பளித்தனர். சங்க முன்னாள் மாநில துணை செயலாளர் பி.சீனிவாசன் வாழ்த்தி உரையாற்றினார். தொடர்ந்து ஆக்கூர் முக்கூட்டு வழியாக வந்த பிரச்சார பயணக்குழுவிற்கு வாலிபர் சங்க வட்டத்தலைவர் சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர் தயானி ஆகியோர் வரவேற்றனர். இரவுதிருக்கடையூரில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்திற்கு மாணவர் சங்கமாவட்ட துணை செயலாளர் அமுல் காஸ்ட்ரோ தலைமை வகித்தார். வாலிபர் சங்க முன்னாள் மாநில துணை செயலாளர் ரவிச்சந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர்டி.சிம்சன், பி.சீனிவாசன், டி.கோவிந்தசாமி உள்ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றி, பிரச்சார பயணக்குழு நிர்வாகிகள் மாநில துணை தலைவர் எம்.கண்ணன், மாநில துணை செயலாளர் ஆறு.பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் மாரியப்பன், ஜோதிபாஸ், அய்யப் பன் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனர். திங்களன்று திருக்கடையூர் சன்னதி வீதியில் பிரச்சார பயணக்குழுவை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க த.பே.மா.லு கல்லூரி கிளைப்பொருளாளர் பிராங்க் துவக்கி வைத் தார்.
சீர்காழி
இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அரசு பள்ளிகளை பாதுகாத்திடவலியுறுத்தி கடலூரிலிருந்து சுமார் 50 பேர் சைக்கிளில் ஊர்வலமாக புறப்பட்டு திருச்சி செல்லும் வழியில் நாகைமாவட்டத்தின் எல்லையான கொள்ளிடத்திற்கு வந்த போது அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஞாயிறு காலை சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில் முன்னாள் நகர்மன்றதலைவர் கே.பி.எஸ்.எம்.கனிவண் ணன், இந்திய மாணவர் சங்கத்தின் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். மாணவர் சங்க மாவட்ட தலைவர் மாசி. அய்யப்பன் தலைமைதாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட செயலாளர் எஸ்.விஜயகுமார், மீன்பிடித்தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி.வி.ஆர்.ஜீவானந்தம், ஆசிரியர் மா.மார்க்ஸ், எம்.டி.அப்பாஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.