புதுக்கோட்டை, செப்.16- புதுக்கோட்டை நகராட்சியில் புதுப்பி க்கப்பட்டு சீரமைக்கப்பட்ட அண்ணா சிலை ரவுண்டானாவினை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திங்கள்கிழமை திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் பேசியது: பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலை அமைந்துள்ள பகுதி ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளின் மூலம் அண்ணா சிலை புது பொழிவு பெற்றுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.