tamilnadu

img

தியாகி நாவலன் நினைவு பொதுக்கூட்டம்

குடவாசல், ஜன.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒப்பற்ற போராளி தியாகி ஜெ.நாவலன் 9 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொ துக்கூட்டம்- பேரணி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேர ளம் கடைவீதியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு நன்னிலம் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டி யன் தலைமை ஏற்று வரவேற்புரை யாற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். குமரராஜா, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலிய பெருமாள், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாநில பொருளாளர் ஜெ.தீபா ஆகியோர் தியாகி நாவலன் தியாகத்தை நினைவுகூர்ந்து உரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றி னார். நிறைவுரையாக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பினருமான வி.மாரிமுத்து பேசினார். 

முன்னதாக திருமீயச்சூர் தியாகிகள் நினைவிடத்தில் தியாகி ஜெ. நாவலன் ஸ்தூபிக்கு மலர் அஞ்சலி, வீரவணக்கம் செலுத்தி அங் கிருந்து பேரணியாக பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர். பொதுக்கூட்ட மேடையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பா ளர்கள் சிபிஎம் 4 ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் ஐ.முகம்மது உது மான், சிபிஎம் ஊராட்சி மன்றத் தலை வர்களாக பி.ஜெயசீலன் (பண்டார வடை) உமாராணி ராஜகுரு (செருவ ளுர்)ஆகியோர்களின் சிறப்பான வெற்றியினை பாராட்டி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் தியாகி நாவலன் நினைவு தினத்தையொட்டி நடை பெற்ற ரத்ததானம் வழங்கிய வாலிபர் சங்க இளைஞர்களை தலைவர்கள் பாராட்டினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிவேல், கே. தமிழ்மணி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.எம். சலாவு தின், செயலாளர் கே.பி.ஜோதிபாசு, மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆறு.பிரகாஷ், மாவட்ட செயலாளர் ஹரி சூர்ஜித் என ஆயி ரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக நகர செயலா ளர் சீனி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

;