திருநெல்வேலி, ஜூன் 18- நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் குளம் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து விரைந்து சென்ற போலீசார் குளத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.விசாரணையில் கடையம் அருகே உள்ள முப்பிலியூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சிவன் வைத்தி லிங்க ராஜா(வயது 26), புலவனூர் பொன்மலைநகரை சேர்ந்த முத்துகுமார்(25) என தெரியவந்தது. இதை யடுத்து வைத்திலிங்கராஜா, முத்துகுமாரை கைது செய்த போலீசார் டிராக்டர், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.