சிபிஎம் கடும் கண்டனம்
, டிச.6- கோவில் மடங்கள், சத்திரங்கள், அறக்கட்டளைகள் போன்றவற் றின் மூலமாக ஆயிரக்கணக்கான சிறுகுறு விவசாயிகள் குத்தகை தாரர்களாக சாகுபடி தொழிலில் ஈடு பட்டு விவசாயம் செய்து வருகின்ற னர். இவர்களை நிலங்களில் இருந்து வெளியேற்றும் நயவஞ்சக சிந்த னையோடு பல நடவடிக்கைகளில் கோவில் நிர்வாக ஈடுபட்டு வரு கிறது. இந்த நடவடிக்கைக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் திருவாரூர் மாவட் டக்குழு கூட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் ஜி.பழனி வேல் தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரி முத்து, அரசியல் நிலவரங்கள் குறித்தும், கட்சியின் எதிர்கால அணுகுமுறைகள் குறித்தும் பேசி னார். மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், திருவாரூர் மாவட் டத்தில் கோவில் நில குத்தகை சாகு படிதாரர்கள் பரவலாக உள்ளனர். இவர்கள் அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும், இழப்புகளுக்கு இடையிலும் தங்கள் உயிராக கருதக் கூடிய விவசாய தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மாநில அரசுகளின் தவறான விவ சாய விரோத கொள்கைகளால் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ள னர். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் இவர்கள் இத்தொழில் இலாபகரமாக இல்லாத சூழலில் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படுகிறார் கள். உழைக்கும் பலன் கிடைக்கா ததால் கோவில் நிர்வாகத்திற்கு குத்தகை செலுத்துவதில் பின்ன டைவை சந்திக்கின்றார்கள். இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு ஆதர வாகவும், ஆறுதலாகவும் இருக்க வேண்டிய கோவில் நிர்வாகம் அதற்கு மாறாக குத்தகை பாக்கித் தொகையை உடனடியாக மொத்தமாக கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். சுமார் ஒரு லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது என்றால் அதனை உடனே ஒரே தவணையாக கட்ட வேண்டும் என நிர்பந்தம் செய்கி றார்கள்.
வலங்கைமான் வட்டம் மாணிக்கமங்கலம் ஊராட்சியில் 24 விவசாயிகளுக்கு இதுபோன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்த நிலை உள்ளது. அதேபோன்று பயிர் இன்சூரன்ஸ் பெறுவதற்கு இந்த விவசாயிகளுக்கு வருவாய்த் துறையினர் கடிதம் அளிக்காமல் கோவில் நிர்வாகத்திற்கு ஆதர வாக சட்டவிரோதமாக செயல்படு கின்றனர். இதன் உள்நோக்கம் எப்படியாவது குத்தகை விவசாயி களை கோவில் நிலங்களில் இருந்து வெளியேற்றுவதாகும். இதனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் இதுபோன்ற மறைமுக அச்சுறுத்தல்களை தவிர்ப்ப தற்கு கோவில் நிர்வாகம் முன்வர வேண்டும். குத்தகை விவசாயிக ளின் பாக்கி முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். கேரள மாநி லத்தைப் போல உழுபவர்களுக்கு நிலத்தை சொந்தமாக்கி அதற்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து தவணை முறையில் அத னைப் பெற்று சம்பந்தப்பட்டவர்க ளுக்கு நிலத்தை சொந்தமாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. குத் தகை விவசாயிகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.