tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

கல்வி உரிமை மாநாடு பிரச்சாரம் 
திருச்சிராப்பள்ளி, ஆக.1- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கல்வி உரிமை மாநாடு வருகிற 23 ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த கல்வி உரிமை மாநாடு குறித்த பிரச்சார கையெழுத்து இயக்கம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் உருமு தன லெட்சுமி கல்லூரி நுழைவாயில் முன் நடைபெற்றது. கையெ ழுத்து இயக்கத்திற்கு தமுஎகச மாவட்டத்தலைவர் நந்த லாலா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரங்கராஜன், இந்திய மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி, ஆக.1- திருச்சி மாவட்டத்திற்கென ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை உருவாக்க வேண்டும். ஜங்சன் மேம்பால பணியை விரைந்து முடிவெடுக்க வேண்டும். துவாக்குடி– பால்பண்ணை வரை சர்வீஸ் சாலை, பொன்மலை ஜி கார்னரி லும் சென்னை நெடுஞ்சாலை, சர்க்கார்பாளையம் அருகில் சுரங்க பாதைகள் அமைத்து கொடுக்க வேண்டும் உள்பட திருச்சி மாநகர மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியமங்கலம் பகு திக்குழு சார்பில் புதனன்று நேருஜிநகர் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  கிளை செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். பிரச்சா ரத்தை விளக்கி மாநகர மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சி.பாண்டியன், லெனின், இடைக்கமிட்டி உறுப்பினர் கனல்கண்ணன் ஆகியோர் பேசினர்.

மாற்றுத் திறனாளிகள் சங்க கிளை துவக்க விழா
திருச்சிராப்பள்ளி, ஆக.1- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா புதனன்று அந்தநல்லூர் ஒன்றியம் அயி லாப்பேட்டை மற்றும் காவல்பாரன்பாளையம் ஆகிய இடங்க ளில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். செயலாளர் கோபிநாத், பொருளாளர் புஷ்பநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வங்கிக்கடன், வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அரசு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள், பஸ்பாஸ், ரயில்பாஸ் ஆகியவற்றை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய கிளைத்தலைவராக முருகேசன், செயலாளராக தீபாதேவி, பொருளாளராக அகிலா உள்பட 9பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டனர். காவல்காரபாளைய கிளைத் தலைவராக சுப்பிரமணி, செயலாளராக ரவி, பொரு ளாளராக மகேஷ் உள்பட 9பேர் கொண்ட புதிய நிர்வா கக்குழு தேர்வு செய்யப்பட்டனர்.