tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

எரிவாயு தகன மேடையை பராமரிக்க  தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

திருச்சிராப்பள்ளி, பிப்.8- திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், திருச்சி மாநகராட்சி எல்லை க்குட்பட்ட வார்டு எண் 8-ல் அமைந்துள்ள ஓயாமரி எரிவாயு  தகன மேடை மற்றும் வார்டு எண் 40-ல் அமைந்துள்ள கரு மண்டபம் எரிவாயு தகன மேடை மற்றும்  வார்டு எண் 57-ல்  அமைந்துள்ள கோணக்கரை எரிவாயு தகன மேடை ஆகி யவைகளை நவீனமயமாக்கவும், பராமரிக்கவும் மற்றும் சிறந்த முறையில் இயக்குவதற்கும் விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை ஆணையர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி என்ற முகவரிக்கு பிப்.14 மாலை  5 மணிக்குள் பதிவஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம்  அனுப்பி வைக்க கோரப்படுகிறது.  பிப்.14-க்கு பின்னர் பெறப்ப டும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கோழிகளுக்கு தடுப்பூசி முகாம்

திருச்சிராப்பள்ளி, பிப்.8- வருடந்தோறும் பிப்ரவரி மாதத்தில் இருவார கோழி கழிச்சல் தடுப்பூசி  முகாம் நடத்தப்பட்டு  வருகிறது. இந்த ஆண்டு பிப்.9 முதல் பிப்.22 வரை  நடைபெறுகிறது. கோழிகளை கோழிக் கழிச்சல் நோய் தாக்கத்திலி ருந்து காப்பாற்றும் வகையிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில்  அனைத்து பொதுமக்களும் அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது  கால்நடை கிளை நிலையங்களுக்கு தங்களது கோழிகளை கொண்டு சென்று தடுப்பூசி இலவசமாக போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்  சிவராசு தெரிவித்துள்ளார்.