tamilnadu

திருச்சி,நாகப்பட்டினம், திருவாரூர் ,அரியலூர்.புதுக்கோட்டை,தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

சிஐடியு கிளை துவக்க விழா
திருச்சிராப்பள்ளி, ஜூலை 29-சிஐடியு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா திங்களன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீரங்கம் பகுதி தலை வர் மாணிக்கம் தலைமை வகித்தார். சிஐடியு உதவி பொதுச்செயலாளர் குமார் புதிய கிளையின் பெயர் பலகை யை திறந்து வைத்து சங்க கொடியை ஏற்றி சிறப்புரை யாற்றினார். திருச்சி பொதுச்செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் சந்திரன், துணைச்செயலாளர் வெற்றிவேல் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். ஸ்டாண்டு உறுப்பினர்கள் விஜயகுமார், எம்.ஜி.குமார், சதீஷ், சங்கர், ஹரிபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணை செயலாளர் சக்திவேல் வரவேற்றார். பொருளா ளர் அன்புசெல்வன் நன்றி கூறினார்.

அப்துல் கலாமுக்கு புகழஞ்சலி
சீர்காழி, ஜூலை 29-நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாமின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. கொள்ளிடம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், அப்துல் கலாமின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், கொள்ளிடம் வட்டார முன்னாள் தலைவர் கண்ணையன், பானுசேகர், விஷன் இந்திய இயக்க மாவட்ட பொறுப்பா ளர்கள் இன்பராஜ், வினோத், விவேக், திருவேங்கடம், ராஜகுரு, முரளிதரன், கதிர் உள்ளிட்ட பலர் புகழஞ்சலி செலுத்தினர்.

நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம்
மன்னார்குடி, ஜூலை 29-திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், நுகர்வோர் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ச.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பொதுச்செயலா ளர் சா.சம்பத் ஆண்டறிக்கை வாசித்தார். ம.பத்மநாபன், டி.இளங்கோவன், ம.இராமசாமி, ப.குணசேகரன், ஜி. கருணாநிதி, மோகன்தாஸ், வி.பாலகிருஷ்ணன், பிச்சைக் கண்ணு, ஜி.வைதேகி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மன்னார்குடியில் போக்குவரத்து நெரி சலை குறைக்க சுற்றுச்சாலை(ரிங் ரோடு) பணி விரைந்து துவக்கப்பட வேண்டும். மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கி சேவை துவக்க வேண்டும். மேலும் ரத்த சுத்திகரிப்பு வசதி முழு மையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக பொருளாளர் சா.நவநீத கிருஷ்ணன் நன்றி கூறினார்.

மடிக்கணினி கேட்டு போராட்டம் 
அரியலூர், ஜூலை 29- அரியலூர் மாவட்டம் உதயத்தை கிராமத்தைச் சார்ந்த மாணவர்கள் மடிக்கணினி வழங்கக் கோரி சாலை மறிய லில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

மாணவர்களுக்கு  கட்டுரைப் போட்டி 
புதுக்கோட்டை, ஜூலை 29- புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பாடல் ஒப்பு வித்தல், பேச்சு, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டன. போட்டி களில் திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி மாண வர்கள் பல்வேறு போட்டி வெற்றி பெற்றுள்ளர். தொடர்ந்து எட்டாவது முறையாக மேல்நிலைப் பிரிவுக்கான கேட யத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான் வழங்கிட பள்ளியின் முதல்வர் கவிஞர்.தங்கம் மூர்த்தி பெற்றுக்கொண்டார்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மதர்தெரசா கல்விநிறு வனங்கள் இரா.சின்னத்தம்பி, பரிசுகளும் சான்றிதழும் வழங்கினார். இராமையா, செந்தூரான் கல்வி நிறுவ னங்கள் வைரவன், பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன், ரோட்டரி முன்னாள் ஆளுநர் முத்துச்சாமி கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார், பாரதி, மற்றும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.கௌரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டாஸ்மாக் ஊழியரை தாக்கி1.81 லட்சம் ரூபாய் கொள்ளை
தஞ்சாவூர், ஜூலை 29- பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இளங்கார்குடி யை சேர்ந்த சிவராமன்(வயது 50) என்பவர் மேற்பார்வை யாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு, தனது சொந்த ஊரான இளங்கார்குடிக்கு இரவு 10.15 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த சில நபர்கள் அரசலாறு கரையில் சிவராமனை வழிமறித்து தாக்கி அவ ரிடம் இருந்த 1,81,000 பணத்தை பறித்து சென்றனர். பலத்த காயத்துடன் அவர் கபிஸ்தலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பாபநாசம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால் கூறுகையில், “இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி களை மாவட்ட காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே டாஸ்மாக் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் கடையில் விற்ப னையான பணத்தை கடையில் வைத்திருப்பதோ, வீட்டுக்கு கொண்டு செல்வதோ ஊழியர்களுக்கும், பணத்துக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே கடை விற்பனை பணத்தை அன்றே நேரில் வந்து, கடைகளில் வசூலித்து செல்ல டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். படுகாயமடைந்த ஊழியரின் மருத்துவ செலவை டாஸ்மாக் நிர்வாகமே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

வேளாண் பணிகளில் மாணவிகள் 
சீர்காழி, ஜூலை 29-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவிகள் தங்கி வேளாண் பயிற்சி பெற்று வருகின்றனர். பல்வேறு பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளின் அனுபவங்களை கற்றும், தங்க ளுக்கு தெரிந்த நவீன தொழில்நுட்பம் குறித்த விளக்கங் களை தெரிவித்தனர். இதில் மாணவிகள், அங்குள்ள ஓர் வயலில் எளிதில் முள்ளங்கி அறுவடை செய்யும் முறையை செயல் முறை மூலமாக எடுத்து கூறினர்.