திருச்சிராப்பள்ளி,நவ.12- தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க சிறப்பு பயிற்சி முகாம் செவ் வாயன்று வெண்மணி இல் லத்தில் நடைபெற்றது. கூட் டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சம்பத் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கருணாநிதி வேலையறிக்கையை வாசித்தார். ஸ்தாபன விரிவாக்கம் குறித்து சம்மேளன துணை பொதுச்செயலாளர்கள் மதுரை பிச்சை, திண்டுக்கல் பாண்டியன், கனகசுந்தரம், ஈரோடு ஸ்டான்லி ஜான்சன் ஆகியோர் பேசினர். கூட்டத் தில் நிர்வாக்குழு உறுப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். துணைத்தலை வர் சீனிவாசன் நன்றி கூறினார்.