tamilnadu

img

ஊதிய ஒப்பந்த உயர்வு பேச்சுவார்த்தையை துவக்க போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை

தஞ்சாவூர் செப்.27- ஊதிய ஒப்பந்த உயர்வு பேச்சுவார்த்தையை துவக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சிஐடியு- தொமுச கூட்டுக் குழு சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது.  சிஐடியு விரைவுப் போக்குவரத்துக் கழக மத்திய சங்க துணைத் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், துணைச் செயலாளர் எஸ்.செங்குட்டுவன், மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, பி.என்.பேர்நீதி ஆழ்வார், த.முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.குருசாமி, அரசுப் போக்குவரத்துக் கழக மத்திய சங்க துணைச் செயலாளர் ராமசாமி ஆகியோர் பேசினர்.  தொமுச பணிமனைச் செயலாளர் ராஜேந்திரன், சிஐடியு நிர்வாகிகள் முருகேசன், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். சிஐடியு பணிமனைச் செயலாளர் பழனிவேலு நன்றி கூறினார். உரந்தை போர்முரசு கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.